Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Thursday, October 10, 2013

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாத மகளை நாய்க் கூட்டில் அடைத்து வைத்த தாய்

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாத மகளை இரண்டு மணி நேரம் வீட்டில் உள்ள நாய்க் கூட்டில் அடைத்து வைத்த சம்பவம் ஒன்று கொழும்புக்கு அருகில் உள்ள கிரிபத்கொட என்ற பிரதேசத்தில் நடந்துள்ளது.
நாய் அடைத்து வைக்கப்படும் கூட்டில் அடைக்கப்பட்ட பிள்ளையின் தாய் தனியார் பாடசாலை ஒன்றின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தான் கற்பிக்கும் பாடசாலையில் பணியாற்றும் சக ஆசிரியர்களுக்கு முகம் கொடுக்க முடியாத காரணத்தினால் அவர் தனது மகளுக்கு இப்படியான தண்டனையை வழங்கியுள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சையில் தான் குறைந்த புள்ளிகளை பெற்றதால் தனது தாய் தன்னை நாய் கூட்டில் அடைத்து வைத்ததாக மகள் தனது பாடசாலை நண்பர்களிடம் கூறியுள்ளார்.
அவரது நண்பர்கள் சம்பவம் பற்றி தமது வீடுகளுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தை அடுத்தே இந்த சம்பவம் பற்றிய தகவல் வெளியில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

 

Sample text

மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Sample Text