Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Tuesday, October 8, 2013

அட்டாளைச்சேனையில் விபத்து; ஒருவர் மரணம்


அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை , மீனோடைக்கட்டு பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை ஏழு மணியளவில் பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணம் செய்த மூவரில் ஒருவர் மரணித்துள்ளார். ஏனையோர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த EPYL-5709 எனும் இலக்கமுடைய முச்சக்கர வண்டியில் பயணித்தோரும் மரணமடைந்தவரும் நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்தோர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் கிடைக்கப்பெற்ற ஆவணத்தின் படி முச்சக்கர வண்டி சாய்ந்தமருது பிரேதசத்துக்கு உரியதென அடையாளம் காணப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிசார் சம்பவ இடதிற்கு விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

 

Sample text

மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Sample Text